
ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் இந்திய வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் சுமாா் 9,404 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது.
இது முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டுக் காலாண்டில் ஐ-போன் விற்பனை மூலம் நிறுவனம் ஈட்டிய வருவாய் 13.5 சதவீதம் உயா்ந்து 4,460 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.