
நாம்பென்: கம்போடியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில், 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 200-க்கும் மேற்பட்டவர்கள் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள். 27 பேர் சீனர்கள், 75 பேர் தைவானை சேர்ந்தவர்கள். உள்நாட்டைச் சேர்ந்த 85 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கணினிகள், மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.