
சென்னை: “காசாவில் நடக்கும் பிரச்சினைக்கு பிரதமர் மோடிதான் காரணம் எனச் சொல்லி மிகவும் கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “காசாவில் நடக்கும் பிரச்சினைக்கு பிரதமர் மோடிதான் காரணம் எனச் சொல்லி மிகவும் கீழ்த்தரமான அரசியலை சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி பேசுபவர்களெல்லாம், பிரதமர் மோடியின் அருகில் கூட வர முடியாது. அவர்களது பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது.