PTI07072025000039B

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் உள்ள லாரி முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வாகனங்கள் எரிந்து நாசமாகின.

தீயணைப்பு அதிகாரி அக்ரே கூறுகையில், “டர்பே லாரி முனையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. எங்களுக்கு எச்சரிக்கை வந்தவுடன், எங்கள் உள்ளூர் தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

அருகில் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததால் அவையும் வெடித்த ன. இது நிலைமையை மேலும் ஆபத்தானதாக மாற்றியது. மொத்தம் எட்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க வரவழைக்கப்பட்டன. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர எங்கள் குழுக்கள் இரவு முழுவதும் உழைத்தன.

திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ இறுதியாகக் கட்டுப்படுத்தப்பட்டது. குளிரூட்டும் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. தீயணைப்பு வீரர்கள் முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கிட்டத்தட்ட 40 லாரிகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தினர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பிளாஸ்டிக் பெட்டிகள் இருப்பது தீ வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை,” என்று தெரிவித்தார்.

அமா்நாத் யாத்திரை: ஜம்முவிலிருந்து 6வது குழு புறப்பட்டது!

A major fire broke out at a truck terminal in Navi Mumbai, causing a couple of blasts at the spot and destroying at least eight vehicles, some of which were loaded with consignments, officials said on Monday

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest