1377102

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் சாண்டா கிளாரா பகு​தி​யில் இந்​திய இளைஞரை போலீ​ஸார் சுட்​டுக் கொன்​றனர். தெலங்​கானா மாநிலத்​தின் மஹபூப்​நகரை சேர்ந்​தவர் முகமது நிசா​முதீன் (32). கடந்த 2016-ம் ஆண்​டில் அவர் அமெரிக்கா​வுக்கு சென்​றார். அங்கு புளோரி​டா​வில் உயர் கல்வி பயின்​றார். பின்​னர் கலி​போர்​னியா மாகாணம், சாண்டா கிளாரா பகு​தி​யில் சாப்ட்​வேர் இன்​ஜினீய​ராக அவர் பணி​யாற்றி வந்​தார்.

அங்​குள்ள வாடகை வீட்​டில் முகமது நிசா​முதீனும் மற்​றொரு நபரும் தங்​கி​யிருந்​தனர். கடந்த 3-ம் தேதி இரு​வருக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. அ்ப​போது நிசா​முதீன், சக நண்​பரை கத்​தி​யால் குத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு சென்ற சாண்டா கிளாரா பகுதி போலீ​ஸார், முகமது நிசா​முதீனை துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் அவரது உடலில் 4 குண்​டு​கள் பாய்ந்​தன. உடனடி​யாக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவர் உயி​ரிழந்​தார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest