Lupin

புதுதில்லி: கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ஜெனரிக் மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருந்து நிறுவனமான லூபின் இன்று தெரிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த மருந்து தயாரிப்பாளர் ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், இந்த நிறுவனம், பாஷ் & லோம்ப் இன்க் நிறுவனத்தின் லோடிமேக்ஸ் ஆப்தால்மிக் சஸ்பென்ஷனுக்கு சமமான லோட்டிரெட்னோல் எட்டபோனேட் ஆப்தால்மிக் சஸ்பென்ஷனை அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

லோட்டிரெட்னோல் எட்டாபோனேட் ஆப்தால்மிக் சஸ்பென்ஷன், 0.5 சதவிகிதம், கண்ணில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்து. குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் என்றது லூபின்.

பிஎஸ்இ-யில் லூபின் பங்குகள் 1.04 சதவிகிதம் குறைந்து ரூ.1,931.10 ஆக நிலைபெற்றது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் 18 காசுகள் சரிந்து ரூ.85.94 ஆக நிறைவு!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest