
மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் எனும் ஜெலன்ஸ்கியின் கருத்தில் உடன்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனினும், அமைதிக்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.