
வெளிநாட்டு பொருள்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமலாவது உறுதி; காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை(ஜூலை 8) தெரிவித்தார்.
டிரம்ப் பல்வேறு நாடுகள் மீதும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையை தொடங்கிவிட்டார். முதல்கட்டமாக, இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, வங்கதேசம், மியான்மர், இந்தோனேஷியா உள்பட 14 நாடுகளுக்கு திங்கள்கிழமை(ஜூலை 7) கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில், ஆகஸ்ட் 1முதல், தற்போது டிரம்ப்பால் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய வரி விகிதத்தில் வரி செலுத்துவது கட்டாயம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
இதையும் படிக்க: மியான்மருக்கு 40% வரி விதிப்பு: இந்தியாவுக்கு எவ்வளவு? -டிரம்ப் கடிதம்!