1378510

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் நார்த் டெக்​சாஸ் பல்​கலைக்​கழகம், ஸ்டான்​போர்டு பல்​கலைக்​கழக விஞ்​ஞானிகள் இணைந்து இதயம், கல்​லீரல், ரத்த நாளங்​கள் உள்​ளிட்ட மனித உறுப்​பு​களை ஆய்​வகத்​தில் செயற்கையாக உரு​வாக்கி சாதனை படைத்து உள்​ளனர்.

இதுதொடர்​பான ஆய்​வறிக்கை முன்​னணி மருத்​துவ இதழ்​களில் வெளி​யிடப்​பட்டு உள்​ளது. அந்த ஆய்​வறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆய்​வகத்​தில் ஸ்டெம் செல்​களை பயன்​படுத்தி செயற்கை இதயத்தை உரு​வாக்​கும் ஆராய்ச்​சி​யில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஈடு​பட்டு வரு​கிறோம். இதன்​படி 16 நாட்​களில் எங்​களது ஆய்​வகத்​தில் செயற்கை இதயம் உரு​வாக்​கப்​பட்​டது. இந்த செயற்கை இதயம்,மனித இதயத்தை போன்று துடிக்​கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest