rahul-gandhi

புது தில்லி: நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அமெரிக்கா, எச்-1பி விசா கட்டணத்தை கடுமையாக உயர்த்தியிருக்கிறது. இதனை மேற்கோள்காட்டியே, ராகுல் காந்தி இந்த பதிவை இட்டுள்ளார்.

எச்-1பி விசா கட்டணத்தை அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் உயர்த்தி இன்று அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்காவின் எச்-1பி விசா பெற ரூ.90 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்கா வழங்கிய எச்-1பி விசாவில் 71 சதவிகிதத்தை இந்தியர்கள் பெற்றிருந்த நிலையில், இந்த கட்டண உயர்வு, இந்திய தகவல்தொழில்நுட்ப ஊழியர்களைக் கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் இந்த உத்தரவு குறித்த செய்திய தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருக்கும் ராகுல் காந்தி, நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest