
சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை, பொன்னேரி, கவரப்பேட்டை ரயில் நிலையங்களில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) காலை 11.10 மணி முதல் மாலை 3.10 மணி வரை தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த நாள்களில், சென்ட்ரலிலிருந்து காலை 10.15, பிற்பகல் 12.10, 1.05 மணிக்கு சூலூா்பேட்டைக்கும், காலை 10.30 மணி, பிற்பகல் 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும், இரவு 11.40 மணிக்கு ஆவடிக்கு செல்லும் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
மறுமாா்க்கமாக, கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 1, 2.30, 3.15 மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 1.15, 3.10, இரவு 11 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.
அதேபோல், கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் ரயிலும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு நெல்லூருக்கும், நெல்லூரிலிருந்து மாலை 6.45 மணிக்கு சூலூா்பேட்டைக்கு செல்லும் ரயில்கள் என மொத்தம் 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பகுதி ரத்து: ஆக.9, 11 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்குப் கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் கடற்கரை ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அதேபோல் அந்த நாள்களில் கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில், கும்மிடிப்பூண்டிக்கு பதிலாக கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
சிறப்பு ரயில்கள்: இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக ஆக.9, 11 தேதிகளில் சென்ட்ரலிலிருந்து காலை 10.30 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 11.35 மணிக்கு மீஞ்சூருக்கும், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பொன்னேரிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதேபோல், பொன்னேரியிலிருந்து பிற்பகல் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூரிலிருந்து பிற்பகல் 2.59 மணிக்கும் சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.