GlcPTM8bwAEvDMA

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி குறித்துப் பேசிய கருத்துக்களுக்கு அவரது மகன் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

விவசாயிகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய அரசாங்கம் எதிர்க்கட்சியின் எதிர்ப்பைக் குறைக்க அருண் ஜெட்லி வழியாக தன்னை மிரட்டியதாகப் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி.

அருண் ஜெட்லி
அருண் ஜெட்லி

“மிரட்டும் குணமுடையவரல்ல என் தந்தை”

அதற்கு எதிராக ட்வீட் செய்த அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி, “விவசாயச் சட்டங்கள் தொடர்பாக மறைந்த என் தந்தை அருண் ஜெட்லி தன்னை மிரட்டியதாக ராகுல் காந்தி இப்போது கூறுகிறார்.

என் தந்தை 2019ம் ஆண்டு மரணமடைந்தார் என்பதை நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். வேளாண் சட்டங்கள் 2020ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டன.

மிக முக்கியமாக யாரும் எதிரான பார்வை கொண்டிருப்பதற்காக மிரட்டும் குணமுடைய நபரல்ல என் தந்தை. அவர் ஒரு உறுதியான ஜனநாயகவாதி, எப்போதும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

அரசியலில் நடக்கக் கூடிய இதுபோன்ற சூழ்நிலைகள் எழுந்தால், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருமித்த தீர்வை அடைய சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார். அவர் அப்படித்தான் இருந்தார், இன்றும் அவரது மரபு தொடர்கிறது.

நம்முடன் இல்லாதவர்களைப் பற்றிப் பேசும்போது ராகுல் காந்தி இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

இதேபோல மனோகர் பாரிக்கர் ஜியைப் பற்றியும் பேச முயன்றார். அவரது இறுதி நாட்களை அரசியலாக்க முயன்றதும் மோசமான செயல்பாடு.

இறந்தவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்” என எழுதியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest