
புதுடெல்லி: காசா நகரை கைப்பற்றுவோம் என்ற இஸ்ரேலின் நோக்கத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் அந்த நகரத்தின் மீது ராணுவ படையை இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக பயன்படுத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் ஏற்பட்டுள்ள மோதல் வரும் அக்டோபர் 7-ம் தேதியோடு இரண்டு ஆண்டுகளை முழுவதுமாக நிறைவு செய்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை காரணமாக காசாவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா அறிவித்தது. இந்தச் சூழலில்தான் காசா நகர் மீது இதுவரை இல்லாத வகையில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.