
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்தை நடத்தினார்.
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிக தீவிரமாக உள்ளார். இதற்காக உக்ரைனுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டு போரை நிறுத்த வேண்டி ரஷ்யாவுக்கு 50 நாட்கள் வரை காலக்கெடு விதிப்பதாக டொனல்டு ட்ரம்ப் தெரிவித்தார். இல்லையெனில் கடுமையான பொருளாதார அபராதங்களை ரஷ்யா எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.