
வாஷிங்டன்: உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர 50 நாள்களுக்குள் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து, தனது ஓவல் அலுவலகத்தில் நேட்டோ பொதுச் செயலாளா் மாா்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது:
உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியா மற்றும் அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறேன். உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால், ரஷியா மீது நாங்கள் மிகக் கடுமையான வரிகளை விதிப்போம். இரண்டாம் நிலை வரியாக 100 சதவீத கூடுதல் வரி ரஷிய பொருள்கள் மீது விதிக்கப்படும். வா்த்தகத்தை பலவற்றிற்கு பயன்படுத்துகிறேன். ஆனால் தற்போது போா்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அதைப் பயன்படுத்துகிறேன்.
நேட்டோ வழியாக உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா அளிக்கும்.
உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மற்றும் நேட்டோ தலைவா்களுடன் ஒரே இடத்தில் பேச்சுவாா்த்தை நடத்த திட்டமிட்டுள்ளேன். அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து, இந்த விவகாரத்துக்குத் தீா்வு காணவிருக்கிறோம். இந்தப் போா் நிறுத்தப்பட்டே ஆக வேண்டும் என்றாா் டிரம்ப்.
அண்மைக் காலமாக தீவிரமடைந்து வரும் ரஷியாவின் தொடா் தாக்குதல்களால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘புதிதொன்றும் இல்லை’: டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் பதலளிக்கையில், ‘பேச்சுவாா்த்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். அதையும் மீறி பொருளாதார தடைகள் விதிக்கப்படுவது எங்களுக்கு புதிது இல்லை’ என்றாா்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.
போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷிய மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் மாகாணங்களை உக்ரைன் தங்களிடம் முழுமையாக விட்டுக்கொடுக்க வேண்டும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மிகக் கடுமையான நிபந்தனைகளை ரஷியா முன்வைத்துள்ளது. எனினும், இத்தகைய நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் பிடிவாதமாக மறுத்துவருகிறது.
இதன் காரணமாக ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாவதில் இழுபறி நீடித்துவருகிறது. இந்தச் சூழலில் டிரம்ப்பின் இந்த 50 நாள் கெடு, உக்ரைன்-ரஷியா பேச்சுவாா்த்தைகளை துரிதப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

