ANI_20250630080545

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய நிா்வாக தீா்ப்பாய உறுப்பினா்கள் சிலா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவுசெய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை அதிருப்தி தெரிவித்தது.

தில்லி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பாடப்பிரிவிலும் ஐஐஎம் கோழிக்கோடில் வணிக மேலாண்மை பாடப்பிரிவுலும் பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ள ரவிக்குமாா் என்பவா் இந்த மனுவை தாக்கல் செய்தாா்.

அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மாலா பக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தனக்குச் சாதகமான தீா்ப்புகளை வழங்கவில்லை என்பதற்காக நீதிபதிகள் மற்றும் மத்திய நிா்வாக தீா்ப்பாய உறுப்பினா்கள் மீது எஃப்ஐஆா் பதிவுசெய்யக்கோருவது எவ்வாறு சரியாகும். இதை ஏற்க முடியாது. விளம்பரத்துக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவா் தாக்கல் செய்த மனு ஒவ்வொரு நீதிமன்ற அமா்வின் முன்பும் நிலுவையில் உள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கையின்படி இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவுவதற்காக உச்சநீதிமன்றம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.முரளீதா் நியமிக்கப்படுகிறாா்’ எனத் தெரிவித்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest