ANI_20240628152320

உத்தரப் பிரதேசத்தில் பூட்டிய வீட்டினுள் இருந்து ஏசி மெக்கானிக் 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், தக்ஷின்புரியில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் வசிக்கும் தனது உறவினர் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும், வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதாகவும் சீஷன் என்பவர் போலீஸாரிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், வீட்டின் முதல் தளத்தில் நான்கு பேர் மயக்கமடைந்திருப்பதைக் கண்டனர்.

உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஏற்கெனவே மூவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹசீப் பின்னர் பலியானார் என்று போலீஸார் கூறினார்.

பலியான அனைவரும் உ.பி.யைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே அறையில் வசித்து வந்துள்ளனர்.

அறையில் வைக்கப்பட்டிருந்த ஏசியின் சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு 4 பேரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகே முழுமையான காரணம் தெரியவரும். அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக அந்த வளாகத்தில் வசித்து வந்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை: நாளை முதல் விண்ணப்பம்!

Four air conditioning mechanics died of suspected gas leak at their rented accommodation in south Delhi’s Dakshinpuri area, police said on Saturday.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest