dinamani2025-09-10e7rbcet9image1

காந்தாரா இரண்டாம் பாகத்தின் டிரைலர் வரும் திங்கள்கிழமையில் வெளியாகுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கி, நடித்துள்ள காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா `சாப்டர் 1’-இன் டிரைலர் திங்கள்கிழமையில் (செப். 22) பகல் 12.45 மணியளவில் வெளியாகவுள்ளது.

தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான காந்தாரா. 1990-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது. முதல் பாகத்தின் மீதான வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை உலகம் முழுவதும் சுமார் 30 நாடுகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அக்டோபர் 2 ஆம் தேதியில் வெளியாகவுள்ள காந்தாரா சேப்டர் 1 திரைப்படம், 1000 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கிளைமேக்ஸில் ரிஷப் ஷெட்டி 1000 போர் வீரர்களுடன் மோதுவது போன்ற காட்சியும் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: டொவினோ தாமஸ் – நஸ்ரியாவின் புதிய படம்!

Kantara Chapter1 Trailer on Sep 22nd

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest