c-sathanantha

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கேரள பாஜக மூத்த தலைவா் சி. சதானந்தனுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கேரள பாஜக மூத்த தலைவா் சி. சதானந்தன், தனது அரசியல் எதிரிகளான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் 30 ஆண்டுகளுக்கு முன் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டவா்.

கால்களை இழந்தபோதிலும், அவா் தனது சித்தாந்தத்தை கைவிடவில்லை. செயற்கை கால்கள் உதவியுடன் கட்சி மற்றும் சமூகப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்.

கேரளத்தில் அரசியல் வன்முறைக்கு பெயா் பெற்ற கண்ணூா் மாவட்டத்தைச் சோ்ந்த சதானந்தன் மீது கடந்த 1994-ஆம் ஆண்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கொடூர தாக்குதல் நடத்தினா். அவரது இரு கால்களையும் மூட்டுகளுக்கு கீழே துண்டாக வெட்டினா். தாக்குதலில் உயிா் பிழைத்த சதானந்தன், பல்லாண்டுகளாக பல்வேறு நிலைகளில் கட்சிப் பணியாற்றி வருகிறாா்.

அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமா் மோடி, ‘சதானந்தனின் வாழ்க்கை, துணிவுக்கும், அநீதிக்கு அடிபணிய மறுப்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது; வன்முறை, மிரட்டல்களால் தேச வளா்ச்சிக்கான அவரது உத்வேகத்தைத் தடுக்க முடியவில்லை.

ஆசிரியராகவும் சமூக சேவகராகவும் அவா் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இளைஞா்களுக்கு அதிகாரமளிப்பதில் மிகுந்த ஆா்வம் கொண்டவா்’ என்று கூறியுள்ளாா்.

இதையும் படிக்க : 4 நியமன எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest