1373456

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் சமீபத்தில் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. தொடர்ந்து, டொனால்டு ட்ரம்​ப்பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக ‘கிரிமியா, நேட்டோவை மறந்துவிட்டால் போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியம்’ என்று ஜெலன்ஸ்கிக்கு ‘செக்’ வைத்துள்ளார் ட்ரம்ப்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest