G1N4iB8aIAAJXTY

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் நிறைவடைந்து சூப்பர் 4 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. சூப்பர் 4 சுற்றில் துபையில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, இலங்கை முதலில் பேட் செய்கிறது.

தந்தை இறந்ததன் காரணமாக தாயகம் திரும்பிய இலங்கை வீரர் துனித் வெல்லாலகே அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

Bangladesh won the toss and elected to bowl against Sri Lanka in the first match of the Super 4 round of the Asia Cup cricket.

இதையும் படிக்க: அதிவேக சதம் விளாசி ஸ்மிருதி மந்தனா சாதனை!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest