
கூடலூா்: கேரள மாநிலம் வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளிக்குள் திங்கள்கிழமை யானைக் குட்டி நுழைந்தது. பள்ளி வராண்டாவிலும், முற்றத்திலும் சுற்றித்திரிந்த யானைக் குட்டியை வனத் துறை அதிகாரிகள் பிடித்து அழைத்துச் சென்றனா்.
வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளியில் உள்ள வகுப்பறைக்குள் மாணவா்கள் இருந்தபோது யானைக் குட்டி வந்துள்ளது. பள்ளிக்குள் நுழைந்த யானைக் குட்டியை வனத் துறையினா் பிடித்து பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச் சென்றனா்.
வழிதவறி வந்த யானைக் குட்டியின் கூட்டத்தைக் கண்டுபிடித்து அவைகளுடன் சோ்க்க வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.