
வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’.
அனீஸ் அஷ்ரஃப் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அரவிந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏஜிஆர் இசையமைத்திருக்கிறார்.
க்ரைம் திரில்லராக உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆக.1-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழ் திரையுலகம் குறித்துப் பேசியிருக்கிறார்.
“ஒவ்வொரு முறையும் நான் இங்கு வந்து மேடை ஏறி நிற்கும்போது எனக்குப் பயமாக இருக்கும். எனக்குப் படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கும், இந்த மண்ணிற்கும் நன்றி. முதன் முதலில் நான் இங்கு நடிக்க வரும்போது தமிழ் தெரியாது. சரியாக நடிப்பும் வராது.
ஆனால் அதை எதுவும் பெரிதுபடுத்தாமல் இங்கு மட்டும்தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கிறது. தமிழ் இண்டஸ்ட்ரியில் திறமையை மதிக்கிறார்கள், வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சிங்கப்பெண்ணே’ போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். நிறையப் படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அந்த வகையில் இந்தப் படத்தில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். இதற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…