
புதுடெல்லி: திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் 1911-ல் ஏற்பட்ட ஜின்ஹை புரட்சிக்குப் பிறகு திபெத் தனி நாடாக பிரிந்தது. எனினும், 1950-ல் திபெத்தை சீனா மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதையடுத்து, திபெத்திலிருந்து வெளியேறிய 14-வது தலாய் லாமா இந்தியாவில் வசித்து வருகிறார். இதனிடையே அடுத்த தலாய் லாமாவை நாங்கள் தேர்வு செய்வோம் என சீனா கூறியது. இதற்கு அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என தலாய் லாமா தெரிவித்தார்.