1378320

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை ஒட்டி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்துள்ளனர்.

குவெட்டாவில் உள்ள சர்குன் சாலையில் பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் தலைமையகம் உள்ளது. இந்த தலைமையகத்தின் ஓரத்தில் சாலையை ஒட்டிய பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த குண்டு வெடித்தது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest