meet

பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டங்களுக்கு இடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பலதரப்பு கூட்டம் நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரி கரோலின் லியாவிட் நேற்று (செப்.22) கூறுகையில், கத்தார், சவுதி அரேபியா, இந்தோனேசியா, துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன், அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை பலதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், காஸா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட ராஜதந்திர, அரசியல் மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் அதிபர் டிரம்ப்புக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக, பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச்செயலாளர், உக்ரைன், அர்ஜென்டீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களை மட்டுமே சந்திப்பார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியமான நட்பு நாடு இந்தியா! – ஹெச்1-பி விசா பிரச்னைக்கு மத்தியில் மார்கோ ரூபியோ பேச்சு

The White House has announced that US President Donald Trump will meet with leaders of some Islamic countries, including the Prime Minister of Pakistan.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest