
லண்டன்: அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, லண்டனில் அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். அப்போது, அவர்களது முன்னிலையில் இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த 23-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றார். அங்கு அந்த நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: