
பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 136 கிராமங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. 30-க்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்தன.