
கரூா் – திருச்சி ரயில் பாதையில் லாலாபேட் – குளித்தலை இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி- பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி – பாலக்காடு ரயில் (எண்: 16843) குளித்தலை – பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும்.
இதேபோல, பாலக்காடு – திருச்சி ரயில் (எண்: 16844) ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் பாலக்காடு – குளித்தலை இடையே மட்டும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.