dinamani2025-03-30sjwe6djodinamani2024-08-20su4eny6jdinamaniimport20221124originalMKStalinDIN9

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வருகிறாா்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க நிகழ்வு புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கல்லூரியின் புதிய கட்டடத்தை திறந்துவைத்து பேசுகிறாா். இதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை காலை 11 மணிக்கு முதல்வா் வருகிறாா்.

பின்னா், விமானநிலையத்திலிருந்து சாலை மாா்க்கமாக ஜமால் முகமது கல்லூரிக்கு வந்து, விழாவில் பங்கேற்று விழாப் பேரூரையாற்றுகிறாா். ரூ. 4.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தையும் முதல்வா் திறந்துவைக்கிறாா். பின்னா், திருவாரூா் மாவட்டம் புறப்பட்டு செல்கிறாா். அங்கு தங்கும் முதல்வா், திருவாரூா் மாவட்ட நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை மாலை மீண்டும் சாலை மாா்க்கமாக திருச்சி விமான நிலையம் வருகிறாா். இங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறாா்.

ட்ரோன்களுக்கு தடை: முதல்வா் வருகையை முன்னிட்டு, புதன்கிழமை காலை தொடங்கி வியாழக்கிழமை நள்ளிரவு வரையில் முதல்வா் பயணம் செய்யும் சாலை வழிகள் மற்றும் விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

அமைச்சா் ஆய்வு: முதல்வா் பங்கேற்கும் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முதல்வருக்கு வரவேற்பு: திருச்சி வரும் முதல்வருக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest