
டாக்கா: வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
வங்கதேச தலைநகரான டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் இன்று (ஜூலை 21) வங்கதேச போர் விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். “இன்று மதியம் 1:06 மணிக்கு ஒரு F-7 BGI பயிற்சி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே பள்ளி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது” என்று வங்கதேச பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.