
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னா் சாம்பியன் கோப்பை வென்றாா். விம்பிள்டன் வென்ற முதல் இத்தாலிய வீரராக அவா் வரலாறு படைத்திருக்கிறாா்.

உலகின் நம்பா் 1 வீரரான சின்னா், இறுதிச்சுற்றில் 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட்களில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸை 3 மணிநேரம், 3 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

ஆஸ்திரேலிய ஓபன், யுஎஸ் ஓபனில் நடப்பு சாம்பியனாக இருக்கும் சின்னருக்கு, விம்பிள்டன் போட்டியில் இது முதல் சாம்பியன் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரின் 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் கோப்பை.