1369869

மருத்துவ உலகின் ஒரு புதிய மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு, பிரிட்டனில் 3 பேரின் டிஎன்ஏ மூலம் குழந்தை பிரசவிக்கும் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த முறையில் அங்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளன. பரம்பரை நோய்கள் அடுத்த வாரிசுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கவே மகப்பேறு சிகிச்சையில் இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம் பிறக்கும் குழந்தைகள், தனது தாய், தந்தை மற்றும் கருமுட்டை தானமாக அளிக்கும் பெண் ஆகிய 3 பேரின் டிஎன்ஏ-க்களைப் பெற்றிருக்கும். இவ்வாறாக பெறப்படும் கருமுட்டை தானம் ‘மைட்டோகாண்ட்ரியா தானம்’ (mitochondrial donation) என்று சொல்லப்படுகிறது. அதாவது, ஓர் உயிரணுவில் (செல்லில்) உள்ள அந்த குறிப்பிட்ட பகுதி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest