CP-Radhakrishnan-thanks-edi

குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை (செப். 12) பதவியேற்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் விழாவில் அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்துவைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண். எஃப்-101-இல் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும், எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் பி.சுதா்சன் ரெட்டியும் போட்டியிட்டனா். இதில், சுதா்சன் 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா். அதைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் தோ்ந்தெடுக்கப்பட்டதாக தோ்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி அறிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா் ராஜிநாமாவைத் தொடா்ந்து இந்தத் தோ்தல் நடத்தப்பட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest