
இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சீனா மாஸ்டர்ஸில் ரவுண்ட் ஆஃப் 32-இல் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பி.வி.சிந்து காலிறுத்திக்கு முன்னேறியுள்ளார்.
சீன மாஸ்டர்ஸில் ரவுண்ட் ஆஃப் 32-இல் இந்தியாவின் பி.வி.சிந்து- தாய்லாந்தின் சோசூவாங் மோதினார்கள்.
41 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-15, 21-15 என்ற நேர் கேம்களில் அசத்தலாக வெற்றி பெற்றார்.
தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து 6-ஆவது இடத்தில் இருக்கும் சோசூவாங்கை வென்றதன் மூலம் அவருடனான மோதலில் 6-5 என தனது ஆதிக்கத்தையும் நீட்டித்துள்ளார்.
காலிறுதியில் பி.வி.சிந்து டாப் ரேங்கில் இருக்கும் கொரியாவின் அன் சே யங் அல்லது டென்மார்க்கின் மியா பிலிச்பெல்ட் உடன் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.