
வாக்குத் திருட்டு குறித்து பேச மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது…
“நான் எதிர்க்கட்சித் தலைவராக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது மிக வலுவான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைக்க உள்ளேன்.
கர்நாடகாவில் ஆலந்து என்கிற தொகுதி இருக்கிறது. அங்கே யாரோ 6,018 வாக்குகளை அழிக்க முயன்றிருக்கிறார்கள்.
2023-ம் ஆண்டு தேர்தலின்போது, ஆலந்து தொகுதியில் மொத்தம் எத்தனை வாக்குகள் அழிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
அது 6,018-ஐ விட அதிகமாகத்தான் இருக்கும். ஆனால், 6,018 வாக்குகளை அழிக்கும்போது, ஒருவர் எதர்ச்சையாக பிடிப்பட்டுள்ளார்.

பூத் அளவிலான அதிகாரி தன்னுடைய சொந்தகாரர் ஒருவரின் வாக்கு அழிக்கப்பட்டுள்ளதைக் கவனித்திருக்கிறார். அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் தான் அந்த வாக்கை அழித்திருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்.
அது குறித்து அந்த நபரிடம் கேட்டபோது, நான் எந்த வாக்கையும் அழிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
யார் அந்த வாக்கை அழித்தார்… யாருடைய வாக்கு அழிக்கப்பட்டது என்பது எதுவும் தெரியவில்லை. ஏதோ ஒன்று இந்த பிராசஸை நிறுத்தி, வாக்கை அழித்திருக்கிறது.
குறி
இந்தியா முழுவதும் மையப்படுத்தப்பட்ட சாப்ட்வேர்கள் மூலம் மில்லியன் கணக்கான காங்கிரஸ் வாக்குகளை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சியினர், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு போடப்படும் வாக்குகள் தான் குறிவைக்கப்படுகின்றன.
இதுகுறித்து நாங்கள் பல முறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போதுதான் 100 சதவிகித ஆதாரம் கிடைத்திருக்கிறது.

அதிக வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கும் முதல் 10 வாக்குச் சாவடிகள் காங்கிரஸ் சாவடிகள் ஆகும். ஜனநாயகத்தை அழிப்பவர்களைக் காப்பதை ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.
கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேசம் என அடுத்தடுத்து பெரிய அளவிலான வாக்குகள் நீக்கம் நடந்து வருகிறது.
இப்படி ஜனநாயகத்தை அழிப்பவர்களைக் காப்பதை ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.