
உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதலில் நடந்த தகுதிச் சுற்றில் ஈட்டியை 80 மீட்டருக்கும் அதிகமாக எறிந்து, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதேபோல பாகிஸ்தானின் அர்ஷாத் நதீமும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவிற்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் மிகச்சிறப்பாக செயல்பட்டு 92.97 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கம் வென்றார். 89.45 மீட்டருக்கு வீசிய நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில் இந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரின் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ராவிற்கும், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கும் இடையேதான் போட்டியிருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இருவருமே இதில் முதலாவது இடத்தில் இடம்பெறவில்லை.

2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற கெஷோர்ன் வல்காட், 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றிருக்கிறார். இரண்டாவது இடத்தை ஆண்டர்சன் பீட்டர்ஸ், மூன்றாவது இடத்தை குர்டஸ் தாப்சன் பிடித்திருக்கிறார்.
இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 8ஆவது இடத்தை மட்டுமே பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார். மற்றொரு இந்தியரான சச்சின் யாதவ் 86.27 மீட்டர் தூறம் ஈட்டி எறிந்து 4வது இடத்தைப் பிடித்து கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs