
புதுடெல்லி: அமெரிக்க நாட்டின் எச்1பி விசாவுக்கான ஓராண்டு கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது அதிபர் டொனல்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம். இந்நிலையில், இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் யாருக்கு பொருந்தும், இதில் யாருக்கு விலக்கு என்பது குறித்து பார்ப்போம்.
எச்1பி விசாவுக்கான புதிய கட்டண விவரம் குறித்து அமெரிக்க அரசு நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது எச்1பி விசா கேட்டு புதிதாக விண்ணப்பித்தவர்கள் ஒரு முறை மட்டுமே உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும், இந்த புதிய கட்டண முறை ஏற்கெனவே தங்கள் வசம் எச்1பி விசா உள்ளவர்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் இந்த விளக்கம் தற்போது எச்1பி விசா வைத்துள்ளவர்களின் தவிப்பை தணிய செய்துள்ளது.