
வாஷிங்டன்: வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
கடந்த மே 10-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூகவலைதளப் பக்கத்தில், இந்தியா – பாகிஸ்தான் போரை இரவு முழுவதும் நீடித்த மத்தியஸ்தத்தின் மூலம் முழுவதுமாக, உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அதே கருத்தை 40 முறை சொல்லிவிட்டார்.