
வாஷிங்டன்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான வார்த்தை மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் வலதுசாரி செயற்பாட்டாளர் சார்லி கிர்க்கின் துக்க நிகழ்வில் சந்தித்தனர்.
அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த வலதுசாரி செயற்பாட்டாளர் சார்லி கிர்க் (31) செப்டம்பர் 10 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். கிர்க்கை கொலை செய்ததாக 22 வயது டைலர் ராபின்சனை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு மரண தண்டனை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தனது கணவனை கொன்றவரை மன்னிப்பதாக கிர்க்கின் மனைவி அறிவித்துள்ளார்.