G2QOeW4WwAAPSe3

இங்கிலாந்தின் மான்செஸ்டர் ஜெப ஆலயத்துக்கு வெளியே நடந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்:

  • நேற்று (2-ம் தேதி) 09:30 மணிக்குப் பிறகு ஹீட்டன் பார்க் ஹீப்ரு சபை ஜெப ஆலயத்திற்கு வெளியே பொதுமக்களை நோக்கி ஒரு கார் ஓட்டிச் செல்லப்பட்டது.

  • பின்னர் ஓட்டுநர் வாகனத்திலிருந்து இறங்கி மக்களைக் தாக்கத் தொடங்கினார்.

 மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதல்
மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதல்
  • இந்த தாக்குதலில் க்ரம்ப்சால் பகுதியைச் சேர்ந்த அட்ரியன் டால்பி (53) மெல்வின் கிராவிட்ஸ் (66) இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் மூன்று பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

  • அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவலளித்தனர். அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை தாக்குதல் நடத்தியவரை சுட்டுக் கொன்றனர்.

  • பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

  • தாக்குதல் நடத்தியவர் தொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவலில், 35 வயதான ஷாமி என்பதும், அவர் சிரியா வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் தற்போது பிரிட்டிஷ் குடியுரிமைப் பெற்றவர்.

  • சுட்டுக்கொல்லப்பட்டவரின் இடுப்பில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் காணப்பட்டதை அடுத்து வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு நிறுத்தப்பட்டது.

  • அந்த சாதனம் செயல்படாதது என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

 மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதல்
மான்செஸ்டர் ஜெப ஆலய தாக்குதல்
  • இந்தக் கொடூரச் செயல்களுக்குத் துண்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 60 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

  • தாக்குதலுக்கான நோக்கம், காயமடைந்தவர்களின் அடையாளங்கள், காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் அடையாளங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியிடவில்லை.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest