Nallakannu | சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான நல்லகண்ணு 101 வயதில் புதன்கிழமை அன்று காலமானார். சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.பின்னர், நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “வீரவணக்கம்… வீரவணக்கம்…” என முழங்கினார். இதில் வைகோ, செல்வப்பெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
Read more