
வாஷிங்டன்: இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
இதனால் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன்காரணமாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு திட்டம் ஜூலை 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் தற்போது ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.