
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 50 பேர் இருந்ததாகத் தகவல்.
இது குறித்து ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், “விமானம் ரேடார் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மாயமானது. அந்த, விமானத்தின் எரியும் உடற்பகுதி கண்டறியப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.