1527126-pawan-kalyan

ஆந்திராவில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஆந்திர முன்னாள் அமைச்சராக இருந்தவர் ரோஜா. கடந்த 2024 ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சி ஆட்சிக்கு வர, நடிகர் பவன் கல்யாண் கூட்டணி அமைத்து துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

ரோஜா

தனது ஆரம்பகால அரசியலில் சனாதானத்தை எதிர்ப்புப் பேசியவர், இப்போது சனாதனத்திற்கு ஆதராவாகவும், பாஜக விற்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில்கூட இங்கு தமிழ்நாட்டில் பாஜக நடத்திய முருகன் மாநாட்டில் கலந்து பேசியிருந்தார்.

இந்நிலையில் பவன் கல்யாண் குறித்து விமர்சித்துப் பேசியிருக்கும் ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, “பவன் கல்யாண் அரசியல், மக்கள் பணியைவிட சினிமா ஷீட்டிங்கில்தான் அதிக நேரம் இருக்கிறார். எப்போதாவதுதான் ஆந்திரா பக்கமே வருகிறார்.

ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர பக்கம் வந்தால் காவி வேஷ்டி கட்டிக் கொள்கிறார். இப்போ புதுசாக தமிழ்நாட்டில் பச்சை வேஷ்டி கட்டி பேசியிருக்கிறார். திடீர் திடீரென இந்த பக்தர், அந்த பக்தர் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு.” என்று கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest