‘கூலி’ படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

அப்படி படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார். அவரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத்தும் தற்போது சில பேட்டிகளைக் கொடுத்து வருகிறார்.

Coolie
Coolie

அப்படி மலையாள யூட்யூப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் அளித்தப் பேட்டியில் மலையாள சினிமா பற்றியும், மல்லுவுட்டின் டாப் இசையமைப்பாளரான சுஷின் ஷ்யாம் உடனான நட்பு குறித்தும் பேசியிருக்கிறார்.

அனிருத் பேசுகையில், “மலையாள சினிமாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும். எனக்கு பிடித்த சினிமா துறைகளில் ஒன்று மல்லுவுட். கூடிய விரைவில் அங்கு என்னுடைய முதல் திரைப்படத்தைச் செய்ய காத்திருக்கிறேன்.

எனக்கு மலையாள சினிமாவில் ஃபகத் பாசில், துல்கர் சல்மான் எனப் பலரையும் பிடிக்கும்.

சமீபத்தில், சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்த ‘குதந்திரம்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நாங்கள் பேசிக் கொள்வோம்.

அதுபோல, மலையாள சினிமாவின் இளம் இசையமைப்பாளர்கள் பலரையும் எனக்குப் பிடிக்கும்.

அனிருத்
அனிருத்

ஜேக்ஸ் பிஜோயும் அழகாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.” என்றவரிடம் ரேபிட் ஃபயர் வடிவில் கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் ஒரு நாள் யார் கண்ணுக்கும் தெரியாத வரம் பெற்றால் என்ன செய்வீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அனிருத், “அப்படி யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்தால் முதலில் பஸ்ஸில் பயணிப்பேன்.

பள்ளி, கல்லூரி நாட்களில் எப்படி பயணித்தோமோ, அப்படியே பயணிக்க விரும்புகிறேன். அதை இப்போது மிஸ் செய்கிறேன். வெளிநாட்டிற்குச் சென்றால் என்னால் அதைச் செய்ய முடியும். ஆனால், இந்தியாவில் அதைச் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை.” எனக் கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest