
விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தலைவன் தலைவி’.
இப்படத்தில், காளி வெங்கட், சரவணன், ரோஷினி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
மேலும், இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

இத்திரைப்படம் ஜூலை 25-ம் தேதி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 12) சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் ரெட் கார்பெட்டில் செய்தியாளர்களிடம் படக்குழுவினர் திரைப்படம் தொடர்பாகப் பேசினர்.

அப்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கும் தலைவன் தலைவி திரைப்படத்தின் `பொட்டல மிட்டாயே’ பாடலின் பாடகி சுப்லாஷினி, “இந்தப் படத்தோட வருகைக்காக ரொம்ப ஆவலுடன் இருக்கிறேன்.
சந்தோஷ் நாராயணன் சாரோட ஒர்க் பண்ணனும் இன்றது என்னோட ரொம்ப நாள் கனவு. அது நடந்திருக்கு.
விஜய் சேதுபதி, நித்யா மேனன் படத்துல நான் பாடுனது ரொம்ப பெருமையா இருக்கு.” என்று கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…