VGP-Golu-Image-1

சென்னையின் முதன்மையான கடல் மற்றும் நீர்வாழ் உயிர் பூங்காவான விஜிபி மரைன் கிங்டம் இந்தியாவிலேயே முதல் நீருக்கடியிலான நவராத்திரி கொலுவை பெருமையுடன் வழங்குகிறது.

இந்த நிகழ்வு 21 செப்டம்பர் 2025 அன்று மாலை 4 மணிக்கு விஜிபி மரைன் கிங்டம் ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் கர்நாடக மற்றும் திரை இசை பாடகி திருமதி பாம்பே சாரதா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

VGP மரைன் கிங்டம்
VGP மரைன் கிங்டம்

நவராத்திரி கொலுவின் பாரம்பரியத்தை முன்னெப்போதும் பார்த்திராத வடிவத்தில் முன்னெடுத்துச் செல்லும் இந்தத் தனித்துவமான நிகழ்வில் இந்தியாவின் மிகப்பெரிய நீருக்கடியில் உள்ள மீன் காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது. கண்கவர் பின்னணிக்கு மத்தியில் படைப்பாற்றல் கொண்ட கொலு ஏற்பாடுகள் இடம்பெறும் சுறாக்கள் ஸ்டிங்ரேக்கள் ஆக்டோபஸ்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சுவச்சியான கடல் உயிரினங்களால் சூழப்பட்டிருக்கும் போது பார்வையாளர்கள் பண்டிகை உணர்வை அனுபவிக்க முடியும். இது உண்மையிலேயே ஒரு புது வகையான கலாசார மற்றும் காட்சி அனுபவமாக அமைகிறது.

விஜிபி மரைன் கிங்டம் 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ள நாட்டின் முதல் மற்றும் ஒரே நீருக்கடியிலான மீன் காட்சியகம் ஆகும். ஐந்து நீர்வாழ் மண்டலங்களில் 200க்கும் மேற்பட்ட கடல் இனங்களுடன் இந்த இடம் பொழுதுபோக்கிற்குப் பெயர் பெற்றது. “நீருக்கடியிலான கொலு இந்த பார்வையை மேம்படுத்துகிறது. இது பாரம்பரியத்தை புதுமைகளுடன் இணைக்கும் ஒரு கலாச்சாரக் கொண்டாட்டத்தை உருவாக்குகிறது.

VGP மரைன் கிங்டம்
VGP மரைன் கிங்டம்

புகழ்பெற்ற பொழுதுபோக்கு மற்றும் நீர் பூங்காக்களின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை மக்களுக்கு தனித்துவமான அனுபங்களை வழங்குவதற்கான VGP குழுமத்தின் நிலைப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்

இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள கொலு

நீருக்கடியிலான பாரம்பரிய கொலு ஏற்பாடுகள்

பொது மக்கள் மகிழ்ந்து ரசிக்க மீன் காட்சியகம்.

இடம்: விஜிபி மரைன் கிங்டம். ஈசிஆர் இஞ்சம்பாக்கம், சென்னை

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest