
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடையே நடந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளையும், இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்றிருந்தது. நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது. ஆனால் கடைசியில் போட்டி டிராவில் முடிந்துவிட்டது. இருப்பினும் இந்தப் போட்டியில் ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் சதம் அடித்து அசத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில் சதம் அடித்தது குறித்து பேசிய வாஷிங்டன் சுந்தர், “இது ஒரு ஸ்பெஷலான தருணம். சிறுவனாக கிரிக்கெட் ஆடத் தொடங்கி இந்த இடத்தில் நிற்பது நன்றாக இருக்கிறது. இந்த சதத்தை என் குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்கிறேன். எனக்காக அவர்கள் ரொம்பவே ஆதரவாக இருந்திருக்கின்றனர். டிரா அழைப்பைப் பற்றியெல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை.

ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து அழைப்பு வரும் வரை கவனம் சிதறாமல் ஆட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருந்தது. நம்பர் 5 இல் புரமோட் செய்யப்படுவேன் என எதிர்பார்க்கவில்லை. டெஸ்ட் போட்டிகளை விரும்பி ஆடுகிறேன். அதனால் இது ஒரு நல்வாய்ப்பு. கடைசி வரை சண்டை செய்யுங்கள், போராடுங்கள் என்பதுதான் ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து எங்களுக்கு வந்த மெசேஜ்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…