1383615

புதுடெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்செயல்கள் குறித்த வழக்கில் அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும், அதுகுறித்து தான் கவலை கொள்ளவில்லை என்றும் ஹசீனா கூறியுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு முன்னதாக தனது ஆதரவாளர்களுக்கு ஆடியோ செய்தி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில், “அடிமட்டத்திலிருந்து வளர்ச்சி கண்ட கட்சி அவாமி லீக் கட்சி. அதை அவ்வளவு எளிதில் வீழ்த்தி விட முடியாது. எங்கள் கட்சி தொண்டர்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. அவர்கள் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest